For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அரசு ஊழியர்களுக்கு செக்!! 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரிகிறீர்களா? - அரசு எடுத்த அதிரடி முடிவு!!

Department of School Education is conducting a survey for transfer of ministry employees who have been working in the same place for more than 3 years in schools and offices.
02:23 PM Jul 04, 2024 IST | Mari Thangam
அரசு ஊழியர்களுக்கு செக்   3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரிகிறீர்களா    அரசு எடுத்த அதிரடி முடிவு
Advertisement

தமிழ்நாட்டில் பள்ளிகள், அலுவலகங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் பணியாளர்களை பணியிடமாறுதல் செய்ய பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை  அனுப்பப்பட்டது.. அதில் பள்ளிக்கல்வித் துறையில் அனைத்துவித இயக்குநரகங்கள், அலுவலகங்களின் நிர்வாகம் திறம்பட செயல்பட வேண்டியது அவசியமாகும். அதில் பணிபுரியும் பணியாளர்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் ஓரே அலுவலகத்தில், பணியிடத்தில் இல்லாமல் அவர்களை மாறுதல் செய்யவும், விருப்ப மாறுதல் ஆண்டுதோறும் நடத்தவும் தமிழக அரசால் உத்தரவிடப்பட்டு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன.

அதன்படி பள்ளிக்கல்வி அலுவலகங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம், இயக்குநரகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் கடந்த ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி 3 ஆண்டுகளுக்கு மேல் நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உட்பட பணியிடங்களில் வேலை செய்பவர்களின் பட்டியலை கணக்கெடுக்க வேண்டும்.

அந்த விவரங்களை பட்டியலாக தயாரித்து நாளை (ஜூலை 5) மாலை 5 மணிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். எந்த விவரங்களும் விடுபடாமல் முழுமையான வகையில் அறிக்கையை சமர்பிக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
Advertisement