For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கன்னியாகுமரி: பூட்டிய வீட்டில் அழுகிய ஆண் சடலம்..!! கொலையா.? தற்கொலையா.? போலீஸ் விசாரணை.!

03:12 PM Feb 06, 2024 IST | 1newsnationuser7
கன்னியாகுமரி  பூட்டிய வீட்டில் அழுகிய ஆண் சடலம்     கொலையா   தற்கொலையா   போலீஸ் விசாரணை
Advertisement

கன்னியாகுமரி மாவட்டத்தின் தென் தாமரை குளம் பகுதியில் பூட்டிய வீட்டுக்குள் கட்டிட தொழிலாளி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

தென்தாமரைகுளம் வடக்கு கரும்பாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயன். 47 வயதான இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர் தீராத மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரிகிறது. இந்நிலையில் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்ததால் அவரது மனைவி இரண்டு குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில் தனது வீட்டில் தனியாக வசித்து வந்திருக்கிறார் ஜெயன். சம்பவம் நடந்த தினத்தன்று இரவில் மது போதையில் வந்து வீட்டில் உறங்கி இருக்கிறார். மறுநாள் அவர் வெளியே வரவில்லை. மேலும் அவரது வீடு பூட்டியே இருந்திருக்கிறது. அவரது வீட்டில் இருந்து துர்நாற்றமும் வீசி உள்ளது . இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் கருங்கல்லில் உள்ள அவரது சகோதரிக்கு தகவல் கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து அவரது சகோதரி வந்து பார்த்தபோது ஜெயன் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனையடுத்து சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரித்து வருகிறது.

Tags :
Advertisement