For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’உனக்கு டெய்லியும் இதே வேலையா போச்சு’..!! ’இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்’..!! சம்பவம் செய்த மனைவி..!!

03:52 PM Jan 08, 2024 IST | 1newsnationuser6
’உனக்கு டெய்லியும் இதே வேலையா போச்சு’     ’இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்’     சம்பவம் செய்த மனைவி
Advertisement

தினமும் குடித்துவிட்டு வந்து ஓயாமல் டார்ச்சர் செய்த கணவரை மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

சென்னை நுங்கம்பாக்கம் வைகுண்டபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (44). இவர், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி கனகவல்லி (34). இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான பாலகிருஷ்ணன், தினமும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

வழக்கம் போல் சம்பவத்தன்றும் பாலகிருஷ்ணன் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கனகவல்லி, குடிபோதையில் இருந்த கணவரை பிடித்து வேகமாக தள்ளிவிட்டுள்ளார். அப்போது சுவற்றில் மோதி பாலகிருஷ்ணனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவி கனகவல்லி, உடனே ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து, பாலகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக மனைவியை கைது செய்தனர்.

Tags :
Advertisement