For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா..!! தொடர்ந்து உயரும் எண்ணிக்கை..!! மக்கள் பீதி..!!

08:37 AM Dec 20, 2023 IST | 1newsnationuser6
தமிழ்நாட்டில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா     தொடர்ந்து உயரும் எண்ணிக்கை     மக்கள் பீதி
Advertisement

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருவாரூரில் மட்டும் அதிகபட்சமாக 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

உலக நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. உலக நாடுகளில் JN1 என்ற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா நாடுகளில் மிக அதிகமான கொரோனா பாதிப்புகள் பதிவாகி இருக்கின்றன. இந்தியாவிலும் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.

கேரள மாநிலத்திலும் JN1 கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது. கேரளாவில் நேற்று ஒரே நாளில் 115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் அதாவது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 1749 ஆகவும் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிலும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டிலும் சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகமாக வருகிறது. செவ்வாய்க்கிழமையான நேற்று 280 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 77ஆக உயர்ந்துள்ளது.

Tags :
Advertisement