For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பேருந்து நிலையத்தில் இடம் பிடிப்பதில் மோதல் -தொழிலாளி கொலை

11:12 AM Apr 04, 2024 IST | Mari Thangam
பேருந்து நிலையத்தில் இடம் பிடிப்பதில் மோதல்  தொழிலாளி கொலை
Advertisement

பேருந்து நிலையத்தில் தூங்க இடம் பிடிப்பதில் ஏற்பட்ட மோதலில் தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.

Advertisement

சென்னை மாதவரம், பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் வேலவேந்தன் (36). தொழிலாளியான இவர் குடும்பத்தினரைப் பிரிந்து மாதவரம் பழைய பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் தங்கி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை பேருந்து நிலையத்தில், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், மாதவரம் காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீஸார் வேலவேந்தன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில், மாதவரத்தைச் சேர்ந்த சிவசங்கர்(46) என்பவரைக் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் குறித்து கூறிய காவல் துறையினர், "கொலை செய்யப்பட்ட வேலவேந்தன் வழக்கம்போல மாதவரம் பழைய பேருந்து நிலையத்தில் இரவில் தூங்கச் சென்றார். தன்னுடைய இடத்தில் சிவசங்கர் படுத்து தூங்கியதைக் கண்டு கோபம் அடைந்த வேலவேந்தன், நான் தூங்கும் இடத்தில் நீ எப்படி தூங்கலாம்? என வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு தாக்கவும் செய்துள்ளார். இதையடுத்து, சிவசங்கர் அங்கிருந்து கோபத்துடன் வெளியேறி உள்ளார்.

இந்நிலையில், கடந்த 2-ம் தேதி அதிகாலை மாதவரம் பழைய பேருந்து நிலையத்தில் வேலவேந்தன் தூங்கிக் கொண்டிருந்தார். அங்கு சென்ற சிவசங்கர், சிமென்ட் சிலாப்பை வேலவேந்தன் தலையில் போட்டுள்ளார். இதில், பலத்த காயம் அடைந்த வேலவேந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்’’ எனத் தெரிவித்தனர். தூங்கும் இடத்திற்காக தொழிலாளியின் தலையில் சிமெண்ட் சிலாப்பை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement