முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஓரினச்சேர்க்கை உல்லாசம்.. வீடியோ எடுத்த மிரட்டிய காதலன் படுகொலை..!! '19' வயது இளைஞன் வெறி செயல்.!

08:27 PM Feb 06, 2024 IST | 1newsnationuser7
Advertisement

மதுரை அருகே ஓரினச்சேர்க்கை தகராறில் 25 வயது இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த இளைஞரின் நண்பரை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் பைசல் அப்துல்லா பாவத்(25).

Advertisement

கல்லூரி மாணவரான இவர் வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த இவரது பெற்றோர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் மதுரை அழகர் கோவில் பகுதியில் அழுகிய நிலையில் பைசலின் உடல் கண்டெடுக்கப்பட்டு இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக அவரது நண்பர் ஜெயசீலன்(19) என்பவரிடம் விசாரணை நடத்தினார்.

காவல்துறையின் விசாரணையில் தனது நண்பர் பைசலை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார் ஜெயசீலன். பைசல் மற்றும் ஜெயசீலன் இடையே ஓரினச்சேர்க்கை உறவு இருந்திருக்கிறது. இந்நிலையில் அவர்கள் இருவரும் உல்லாசமாக இருக்கும் வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவதாக ஜெயசீலனை மிரட்டி இருக்கிறார் பைசல் . இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயசீலன் அழகர் கோவில் மலைப்பகுதிக்கு பைசலை அழைத்துச் சென்று கொலை செய்த பின் மலையில் இருந்து கீழே தள்ளி விட்டதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் ஜெயசீலனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags :
Friend ArrestedhomosexualmaduraiStudent Murdertn
Advertisement
Next Article