”6 மாதங்களுக்குள் கிளாம்பாக்கம் ரயில் நிலையம்”..!! ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தகவல்..!!
04:46 PM Feb 01, 2024 IST | 1newsnationuser6
Advertisement
கிளாம்பாக்கம் ரயில் நிலையம் 6 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும் என ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.
Advertisement
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”மாநில அரசுடன் ரயில்வே இணைந்து கிளாம்பாக்கம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. புதிய முனையமாக வில்லிவாக்கம் ரயில் நிலையம் தரம் உயர்த்தப்பட இருக்கிறது.
விரிவான திட்ட அறிக்கை முடிக்கப்பட்டு அடுத்த மூன்று மாதங்களில் நிதி ஒதுக்கி கட்டுமானம் தொடங்கும் என்றும் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்திற்கு அடுத்ததாக வில்லிவாக்கம் முனையம் உருவாக்கப்படுவதாக ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.