For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

JUSTIN: திருச்சியில் அண்ணாமலை உட்பட 700 பேர் மீது வழக்கு பதிவு...!

08:51 AM Mar 31, 2024 IST | Vignesh
justin  திருச்சியில் அண்ணாமலை உட்பட 700 பேர் மீது வழக்கு பதிவு
Advertisement

திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 700 பேரு மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement

நேற்றைய தினம், திருச்சி பாராளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக, குக்கர் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர், திருச்சி மாமன்ற உறுப்பினராக இருக்கும் செந்தில்நாதன் அவர்களை ஆதரித்து பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

நேற்று மாலை 6 மணிக்கு பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று காவல்துறையிடம் அனுமதி வாங்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி நேற்று இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி, அமமுக செயலாளர் சாருபாலா, வேட்பாளர் செந்தில்நாதன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 700 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement