முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஆட்டோ மீது மோதிய ஐயப்ப பக்தர்களின் பேருந்து..!! 5 பேர் பரிதாப பலி..!!

10:01 AM Dec 16, 2023 IST | 1newsnationuser6
Advertisement

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கிழக்கேத்தலாவில் இருந்து நேற்று மாலை 6 மணியளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று புல்லூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. செட்டியங்காடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது அரீகோட்டில் இருந்து வந்த ஐயப்ப பக்தர்களின் பேருந்து எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ முற்றிலுமாக நொறுங்கியது. உடனடியாக அங்கிருந்தவர்கள் ஓடிவந்து ஆட்டோவின் இடிபாடுகளில் இருந்தவர்களை மீட்கத் தொடங்கினர். ஆட்டோவில் பயணித்த ஒரு குழந்தை உட்பட 5 பேர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே அவர்களில் 4 பேர் உயிரிழந்தனர்.

Advertisement

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்தார். விபத்தில் இறந்தவர்கள் ஆட்டோ டிரைவர் அப்துல் மஜீத், பயணிகள் முஹ்சினா, தஸ்னீமா, தஸ்னீமாவின் மகள் மோலி (7), ரைசா (3) என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களின் உடல்கள் மாஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும் சபீரா, முகமது நிஷாத், ஆஷா பாத்திமா, ரைஹான் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியாத நிலையில், போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் 5 பேர் பலியாகியிருப்பது கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
ஐயப்ப பக்தர்கள்கேரள மாநிலம்போலீசார் விசாரணைவிபத்து
Advertisement
Next Article