For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தாயுடன் அண்ணன் உல்லாசம்..!! மகளுடன் தம்பி உல்லாசம்..!! லிவிங் டு கெதரால் வந்த வினை..!! பரபரத்த கன்னியாகுமரி..!!

In the end, both of them have been living together in the same house without getting married. Meanwhile, Sivakumar's younger brother Kannan (20) often visits there to see his brother. Then a 15-year-old girl fell in love.
11:43 AM Sep 20, 2024 IST | Chella
தாயுடன் அண்ணன் உல்லாசம்     மகளுடன் தம்பி உல்லாசம்     லிவிங் டு கெதரால் வந்த வினை     பரபரத்த கன்னியாகுமரி
Advertisement

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த 34 வயது பெண்ணுக்கு 16 வயதில் மகனும், 15 வயதில் மகளும் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண் மகன், மகளுடன் தனியாக வசித்து வருகிறார். பெண்ணின் 15 வயது மகள் 9ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், திடீரென படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

Advertisement

இந்நிலையில், அந்த பெண்ணுக்கு குருந்தன்கோடை சேர்ந்த சிவக்குமார் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் உறவில் வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையே சிவக்குமாரின் தம்பி கண்ணன் (20), அடிக்கடி அண்ணனை பார்ப்பதற்காக அங்கு வந்து சென்றுள்ளார். அப்போது 15 வயது சிறுமி மீது ஆசை ஏற்பட்டுள்ளது.

இதனால் சிறுமியிடம் நெருக்கமாக பழகிய கண்ணன், தனது காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். இந்த விவரம் எதுவும் சிறுமியின் தாயாருக்கு தெரியாது. காதலனின் தம்பி என்பதால் அவருக்கு சந்தேகம் வரவில்லை. சம்பவத்தன்று மதியம் சுமார் 12 மணியளவில் சிறுமி திருவிதாங்கோட்டில் உள்ள தாத்தா வீட்டில் இருந்தார். அப்போது தாத்தாவின் செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதனை அவர் எடுத்து பேசியபோது, நான் கண்ணன் பேசுகிறேன். சிறுமியின் பெயரைக்கூறி அவளிடம் போனை கொடுங்கள் என்று கூறியுள்ளார்.

தாத்தாவும், கண்ணன் தெரிந்த பையன் தானே என்று நினைத்து சிறுமியிடம் செல்போனை கொடுத்தார். செல்போனை வாங்கி பேசிய சிறுமியிடம், ஆசை வார்த்தைகளை கூறி, திருமணம் செய்துகொள்ளலாம் என்று கூறியுள்ளார். இதை சற்றும் யோசிக்காத சிறுமி, தாத்தாவுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அங்கு வந்த கண்ணன் சிறுமியை அழைத்துக் கொண்டு தப்பியோடிவிட்டார்.

இதற்கிடையே, பேத்தியை காணாமல் தாத்தா அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சிறுமியின் தாயாருக்கு தகவல் அளித்தார். அப்போது சிறுமியின் தாயார் தொடர்ந்து விசாரிக்கையில் கண்ணனையும் காணவில்லை. எனவே கண்ணன், தனது மகளை கடத்திச் சென்றிருப்பதை உறுதி செய்த சிறுமியின் தாய், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிந்த போலீசார் சிறுமியை கண்ணன் எங்கு அழைத்துச் சென்றுள்ளார், இருவரும் எங்கு இருக்கிறார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : குடும்பத்தில் அமைதி நிலவ நிர்வாண பூஜை..!! நண்பனால் விபரீத முடிவெடுத்த கணவன்..!! மனைவி பரபரப்பு புகார்..!!

Tags :
Advertisement