For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!! பதறிய காவல்துறை..!! நடந்தது என்ன..?

09:00 AM Nov 10, 2023 IST | 1newsnationuser6
தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்     பதறிய காவல்துறை     நடந்தது என்ன
Advertisement

கேரளா மாநில தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

நாடு முழுவதும் பொதுமக்கள் அவசர காலங்களின் போது போலீஸாரை தொடர்பு கொள்ள 112 என்ற அவசரகால சேவை திட்டம் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதில் எவ்விதமான அவசர சேவையாக இருந்தாலும், பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம். உரிய துறைக்கு இந்த தகவல் பரிமாறப்பட்டு, பொதுமக்களுக்கு பாதுகாப்பு சேவைகள் உடனடியாக வழங்கப்படும்.

இந்நிலையில், நேற்று காலை 11.30 மணியளவில் திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் குண்டு வெடிக்கும் என, ஒரு அவசர செய்தி அம்மாநில காவல்துறை தலைமையகத்திற்கு 112 எண்ணிற்கு அனுப்பப்பட்டது. தகவல் அறிந்தவுடன் போலீஸார் உடனடியாக தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மோப்ப நாய்கள் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸார் மிரட்டல் வந்த எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், மிரட்டல் விடுத்த நபர் பொளியூர் உச்சக்கடா பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படும் நிலையில், அவரை அழைத்துச் சென்று போலீஸார் விசாரித்து வருகின்றனர். கடந்த வாரம் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, 12 வயது சிறுவன் ஒருவன் இதே எண்ணில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்திருந்த நிலையில், தற்போது வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement