முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சென்னை: இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பயங்கர விபத்து.! வெடித்து சிதறிய பாய்லர்.! தொழிலாளி பரிதாப பலி.!

02:27 PM Dec 27, 2023 IST | 1newsnationuser4
Advertisement

சென்னை தண்டையார்பேட்டையில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து சிதறியதில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விபத்து தொடர்பாக மீட்பு பணிகள் மற்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement

சென்னை தண்டையார்பேட்டையில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு சொந்தமான சுத்திகரிப்பு ஆலையில் இன்று 12 மணி அளவில் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த பாய்லர் வெடித்து சிதறியது. இந்த சத்தம் கேட்ட ஊழியர்களும் அப்பகுதியில் இருந்தவர்களும் அலறியடித்து ஓடினர்.

இந்த விபத்தில் பாய்லர் அருகே பணியாற்றிய பெருமாள் மற்றும் இரண்டு ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர். இவர்களை மீட்ட சக தொழிலாளர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பெருமாள் அங்கு வைத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த இரண்டு தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags :
ChennaiIndian Oil FactoryOil RefineryOne Labour Murderedtn
Advertisement
Next Article