முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ரத்த புற்றுநோய்..!! பிரபல செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா காலமானார்..!!

Popular newsreader Soundarya, who was undergoing treatment for leukemia, passed away
06:16 PM Jul 26, 2024 IST | Chella
Advertisement

தமிழல் சத்தியம் டிவி, பாலிமர், நியூஸ் தமிழ் உள்ளிட்ட பிரபல செய்தி தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பிரபலமடைந்தவர் சௌந்தர்யா. கள்ளக்குறிச்சியை சேர்ந்த இவர், செய்தித் துறையின் மேல் கொண்ட ஆர்வத்தால் மீடியாவில் இணைந்தார். கடந்தாண்டு இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், உடல்நிலை சீராகாததால் இவருக்கு புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டது.

Advertisement

அதன் முடிவில் அவருக்கு புற்றுநோய் 4-வது ஸ்டேஜில் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் சிகிச்சைக்காக பல லட்சங்கள் செலவாகும் என்ற சூழலில் தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் பலரும் இவருடைய சிகிச்சைக்கு நிதியுதவி வழங்கியுள்ளனர். தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் இவருடைய சிகிச்சைக்காக 5 லட்சம் கொடுத்து உதவினார். கடந்த 6 மாதங்களாக இவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவருடைய மறைவுக்கு தொலைக்காட்சி ஊழியர்கள் மற்றும் செய்தித் துறையை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது உடல் சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிச்சடங்கு நாளை இவரது சொந்த ஊரான கள்ளக்குறிச்சியில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிப்பு..!! அமைச்சர் அதிர்ச்சி தகவல்..!!

Tags :
செய்தி வாசிப்பாளர்சௌந்தர்யாபுற்றுநோய் பாதிப்பு
Advertisement
Next Article