For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

BJP | 'திமுகவின் கூடாரத்தை கலைத்தே ஆக வேண்டும்'..!! அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு..!!

05:57 PM Feb 28, 2024 IST | 1newsnationuser6
bjp    திமுகவின் கூடாரத்தை கலைத்தே ஆக வேண்டும்      அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு
Advertisement

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இன்று (பிப்.28) பிரதமர் மோடி தலைமையில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், "காமராஜரின் ஆட்சியை இன்றைக்கு தமிழகமே எதிர்பார்த்திருக்கிறது. இன்னொரு புறம் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி 400-க்கும் அதிகமான மக்களவை உறுப்பினர்களைப் பெற்று கம்பீரமாக ஆட்சியில் அமர வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

Advertisement

தமிழ்நாட்டின் திசை மாறி இருக்கிறது. ஓர் ஊழல் அரசு, குடும்ப ஆட்சி, தனக்கென்று வாழக்கூடிய ஒரு முதல்வர் இன்று ஆட்சியில் இருக்கிறார். ஆனால், பிரதமர் தூத்துக்குடியில், ராக்கெட் ஏவுதளத்துக்கான அடிக்கல்லை நாட்டிவிட்டு, தூத்துக்குடி துறைமுகத்தின் நிகழ்ச்சியை முடித்துவிட்டு பிரதமர் இங்கு வந்திருக்கிறார். நேற்று திருவனந்தபுரத்தில், விண்வெளிக்குச் செல்லும் 4 இந்தியர்களை அறிமுகப்படுத்திவிட்டு, இங்கு வந்து அமர்ந்திருக்கிறார். இப்படியாக ஒரு வளர்ந்த பாரதத்துக்கான அடித்தளத்தை அமைத்துக்கொண்டிருக்கிறார்.

இன்று காலை திமுக, ஒரு பத்திரிகை விளம்பரம் கொடுத்துள்ளனர். பிரதமர், முதல்வர் படங்களைப் போட்டு ஒரு சீன நாட்டின் ராக்கெட்டைப் போட்டுள்ளனர். நேற்று நமது பிரதமர், விண்வெளிக்குச் செல்லும் 4 இந்தியர்களை அறிமுகப்படுத்தினார். இங்கு தமிழகத்தில் சீனாக்காரர்களின் படத்தை விளம்பரம் செய்கின்றனர். நாட்டுக்காக யார் இருக்கிறார்கள் என்பதை இதில் இருந்தே தெரிந்துகொள்ளுங்கள். 142 கோடி மக்களுக்காக வாழ்வது யார்? கோபாலபுரத்துக்காக யார் வாழ்கிறார்கள் என்பதை தமிழக மக்கள் உணர்ந்து 2024 மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

பிரதமர் மோடி இம்முறை 400 எம்பிக்களுக்கு அதிகமாகப் பெற்று ஆட்சியில் அமரும்போது, தமிழ்நாட்டில் இருந்து செந்நெல்லும், செந்தமிழுக்கும் சாட்சியாக இருக்கக்கூடிய திருநெல்வேலி மண்ணைச் சுற்றியிருப்பவர்கள் அனைவரும் பிரதமருக்கு ஆசீர்வாதம் கொடுத்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்த்துவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அடுத்த 60 நாட்கள், நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். திமுகவின் பொய், அரசியல் அதிகார வரம்புமீறலை அகற்ற வேண்டும். பாஜக மீது பொய் வழக்குப் போட்டு ஒடுக்கிவிடலாம், பத்திரிகையில் பொய் செய்தியைப் போட்டு பரப்பிவிடலாம் என்று நம்பிக்கொண்டிருக்கிற திமுகவின் கூடாரத்தைக் கலைக்க வேண்டிய தேர்தல் 2024 மக்களவைத் தேர்தல்" என்று அண்ணாமலை பேசினார்.

English Summary : DMK's tent must be dismantled

Read More : Driving Licence | சூப்பர் அறிவிப்பு..!! இனி ஓட்டுநர் உரிமம் வீடு தேடி வரும்..!! வெளியான குட் நியூஸ்..!!

Advertisement