For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழகம் முழுவதும்...! இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை...!

06:34 AM Jan 13, 2024 IST | 1newsnationuser2
தமிழகம் முழுவதும்     இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை
Advertisement

இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளியூர்களில் உள்ள அனைவரும் பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ம் தேதி வர உள்ளது. அதனைத் தொடர்ந்து ஜனவரி 16 மாட்டுப் பொங்கல், ஜனவரி 17 உழவர் திருநாள் என்று மூன்று நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது சனிக்கிழமை என்பதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை.

Advertisement

இந்த நிலையில்,தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று இரண்டாம் சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாளை ஜனவரி 14, ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை. ஜனவரி 15, திங்கட்கிழமை பொங்கல், ஜனவரி 16 செவ்வாய்க்கிழமை மாட்டுப்பொங்கல், ஜனவரி 17 காணும் பொங்கல் அரசு விடுமுறை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்று முதல் தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையில் இருக்கும். ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் மேற்கொள்வதில் எந்த ஒரு தடைகளும் இருக்காது.

Tags :
Advertisement