வங்கி வாடிக்கையாளர்களே!… KYC-களை புதுப்பிக்க இன்றுதான் கடைசி நாள்!
வங்கி வாடிக்கையாளர்களின் KYC-களை புதுப்பிக்க இன்றுடன் (மார்ச் 19) கால அவகாசம் முடிவடைகிறது என்று பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது..
பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் KYC-களை புதுப்பிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 2023 டிசம்பர் 31 ஆம் தேதி வரையிலும் KYC சரிபார்ப்பை முடிக்காத வாடிக்கையாளர்களுக்கு, மார்ச் 19 (இன்று) வரை கால அவகாசம் வழங்கி இருந்தனர்.
இந்த காலக்கெடு இன்றுடன் முடிவடைய உள்ளதால் இதுவரை KYC சரிபார்ப்பை முடிக்காதவர்கள் புகைப்படம், ஐடி, பான் கார்டு உள்ளிட்ட KYC பணியை வங்கிக்கு நேரடியாக சென்றோ அல்லது PNB ஆப் மூலமாகவோ மேற்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தி உள்ளனர். அப்படி செய்யவில்லை என்றால், அந்த வாடிக்கையாளர்களின் கணக்கு முடக்கப்படவும் வாய்ப்பு உள்ளது எனவும் எச்சரித்துள்ளனர்.
Readmore: CAA சட்டத்திற்கு எதிராக குவிந்த மனுக்கள்!… உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!