முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சிறப்பு பூஜைகளுக்கு தடை..!! உண்மைக்கு புறம்பான செய்தி..!! நாளிதழ் மீது நடவடிக்கை..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

05:19 PM Jan 21, 2024 IST | 1newsnationuser6
Advertisement

அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா நாளை நடைபெறுகிறது. அதனையொட்டி, தமிழ்நாடு கோயில்களில் சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் நடத்துவதற்கு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை வாய்மொழியாக தடை விதித்துள்ளது என தினசரி நாளிதழ் ஒன்றில் தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆலயப் பணிகளை அனைவரும் போற்றும் வகையில் நிறைவேற்றி வரும் தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்திடும் நோக்கத்துடன் உண்மைக்கு மாறான செய்தியை வெளியிட்டு, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் இச்செயல் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

Advertisement

திருக்கோயில் பணிகளை மிகச்சிறப்பாக நிறைவேற்றி, நாள்தோறும் மக்களின் பாராட்டுகளைப் பெற்றுவரும் தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அப்பட்டமான வேண்டுமென்றெ உள்நோக்கத்துடன் பொய்ச்செய்தியை வெளியிட்டுள்ள செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இத்தகைய தவறான, உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்ட அந்த நாளிதழ் மீது தமிழக அரசு சார்பில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்“ என்று தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.

Tags :
அன்னதானம்சிறப்பு பூஜைதமிழ்நாடு அரசுநாளிதழ் செய்தி
Advertisement
Next Article