For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

யாரும் வாங்காதீங்க...! கேரளாவில் இருந்து வரும் கோழி மற்றும் இறைச்சிக்கு தடை...!

06:00 AM Apr 22, 2024 IST | Vignesh
யாரும் வாங்காதீங்க     கேரளாவில் இருந்து வரும் கோழி மற்றும் இறைச்சிக்கு தடை
Advertisement

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதன் எதிரொலியாக தமிழகத்தில் கோழிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கடந்த சில நாட்களாக பரவி வரும் பறவைக் காய்ச்சலால் கேரள மாநிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கோட்டயம் உள்ளிட்ட பகுதிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளது. வைரஸ் பாதிப்புகள் அதிகம் பதிவாகியதால், பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து, கோழிகள் மற்றும் பிற வீட்டுப் பறவைகளை அழிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில் தமிழகத்தில் கேரளாவில் இருந்து வரும் கோழி மற்றும் அதன் இறைச்சிகளை விற்பனை செய்ய அதிகாரிகள் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளனர்.

பறவைக்காய்ச்சல்‌ என்றால் என்ன...?

பறவைக்காய்ச்சல்‌ நோய்‌ என்பது பறவை இனங்களை தாக்கும்‌ ஒரு வைரல்‌ தொற்றுநோய்‌. இந்த நோய்‌ ஆங்கிலத்தில்‌ A Vian influenza மற்றும்‌ Bird Flu என அழைக்கப்படுகிறது. இந்நோய்‌ கோழி, வாத்து, வாண்கோழி, நீர்ப்பறவைகள்‌ மற்றும்‌ வணப்பறவைகள்‌ ஆகியவற்றை முக்கியமாகத்‌ தாக்கும்‌. பறவைக்காய்ச்சல்‌ வைரஸ்‌ கிருமிகள்‌ பல வகைகள்‌இருந்தாலும்‌ H5N1 என்ற வகை வைரஸ்‌ கிருமி அதிக வீரியம்‌ வாய்ந்தது.

நோய்‌ பாதித்த பண்ணைகளில்‌ இறந்த கோழிகள்‌, கோழிக்கழிவுகள்‌, பண்ணை உபகரணங்கள்‌ மற்றும்‌ கோழித்தீவனம்‌ மூலமாக இந்நோய்‌ பரவுகிறது. இந்நோய்க்கு சிகிச்சை எதுவும்‌ இல்லை.நோய்‌ வராமல்‌ தடுக்க நோய்‌ தடுப்பு முறைகளையும்‌, உயிர்‌ பாதுகாப்பு முறைகளையும்‌ பின்பற்ற வேண்டும்‌.

Advertisement