முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மதுபாட்டிலில் செத்துக் கிடந்த 'ஈ' ... அதிர்ச்சி அடைந்த குடிமகன்...!

06:51 AM May 21, 2024 IST | Vignesh
Advertisement

தென்காசி மாவட்டத்தில் மதுபாட்டிலில் 'ஈ' செத்துக் கிடந்ததை பார்த்து குடிமகன் ஒருவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

டாஸ்மாக் கடையில் சுகாதாரமற்ற மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணமாக இருக்கின்றன. பலமுறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. கடந்த காலங்களில் மது பாட்டில்களில் பல்லி, பூச்சி போன்ற உயிரினங்கள் பாட்டிலுக்குள் செத்து கிடந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் தற்பொழுது தென்காசி மாவட்டத்தில் அதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.

Advertisement

தென்காசி அருகே வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடியில் இருந்து வாசுதேவநல்லூர் செல்லும் சாலையின் நவாச்சாலையில் உள்ள அரசு மதுபானக் கடையில் குடிமகன் ஒருவர் மது பாட்டில் ஒன்றை வாங்கியுள்ளார். சிறிது தூரம் சென்று பார்த்தபோது பாட்டிலுக்குள் ஈ மற்றும் எறும்பு செத்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அரசு மதுபானக் கடைக்கு சென்று நான் வாங்கினேன் பிராந்தி பாட்டிலில் ஈ மற்றும் எறும்புகள் உள்ளன என்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மதுக்கடையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதில் மதுக்கடை ஊழியர் பிராந்தி பாட்டில் பெற்றுக்கொண்டு அதற்குப் பதிலாக வேற மது பாட்டில் கொடுத்து அனுப்பினார்.

Tags :
AlcoholdrinkstasmacTenkasi
Advertisement
Next Article