முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வீட்டிற்கு குலதெய்வத்தை வரவைக்கும் அற்புத பரிகாரம்.! இதை செய்து பாருங்கள்.!?

06:00 AM Feb 27, 2024 IST | 1newsnationuser5
Advertisement

பொதுவாக நம் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ஒவ்வொரு குலதெய்வம் இருக்கும். இந்த குல தெய்வத்தை வழிபாடு செய்வது நம் குடும்பத்தை முன்னேற்றுவதோடு, பல தீய ஆற்றல்களிடமிருந்து நம்மை பாதுகாக்கும். குலதெய்வத்தின் அருள் கிடைப்பது குடும்பத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

Advertisement

குல தெய்வத்தின் அருள் இருந்தால் தான் குடும்பத்திற்கு நிம்மதி மற்றும் செல்வம் கிடைக்கும். இவ்வாறு நம் குடும்பத்தை காக்கும் குலதெய்வத்தை வீட்டிற்கு வர வைப்பதற்கு இந்த எளிய பரிகாரத்தை செய்து வந்தால் குலதெய்வம் நம் வீட்டில் நிரந்தரமாக தங்கும். குல தெய்வத்தின் அருள் கிடைக்கும் பரிகாரத்தை எப்படி செய்யலாம் என்பதை குறித்து பார்க்கலாம்?

பரிகாரம் செய்ய தேவையான பொருட்கள்
வெள்ளை காட்டன் துணி, ஒரு ரூபாய் நாணயம், எழுமிச்சை

முதலில் காலையில் எழுந்ததும் குளித்துவிட்டு பூஜை அறையை சுத்தம் செய்து, அங்குள்ள குலதெய்வத்தின் படத்திற்கு மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும். பின்பு ஒரு வெள்ளை காட்டன் துணியில் மூன்று ஒரு ரூபாய் நாணயங்கள் மற்றும் எலுமிச்சை பழத்தை வைத்து நன்றாக முடித்து போட்டு வைத்துக் கொள்ளவும். முடிச்சி போடும் போது 56 முறை குலதெய்வத்தின் பெயரை உச்சரித்து வர வேண்டும்.

பின்னர் இதை பூஜை அறையில் ஒரு இடத்தில் வைத்து விடவும். மாதம் ஒரு முறை இந்த எலுமிச்சம் பழத்தை கால் பாதம் படாத ஒரு இடத்தில் தூக்கி போட வேண்டும். நாணயங்களை சேர்த்து குல தெய்வ கோயிலுக்கு காணிக்கையாக செலுத்தவும். இவ்வாறு தொடர்ந்து செய்யும்போது குல தெய்வம் நம் வீட்டிற்கு வரும் என்று நம்பப்பட்டு வருகிறது.

English summary : astrology believe about god

Read more : வீட்டில் பூஜை அறையில் இதை மட்டும் செய்து பாருங்க.? வாழ்வில் வேற லெவல் மாற்றம் தெரியும்.!?

Advertisement
Next Article