முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’ஆசையா பேசுனாரு’... ’நானும் அதுக்கு ஒத்துக்கிட்டேன்’..!! ஆம்புலன்ஸ் ஓட்டுநரால் கர்ப்பமான பிளஸ்2 மாணவி..!!

Believing in his words of desire, we both became close. Due to this, I am now pregnant,' said the student.
07:22 AM Sep 24, 2024 IST | Chella
Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரம் களப்பக்காடு பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர், 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி, கடந்த இரண்டு மாதங்களாக முறையாக மாதவிடாய் சுழற்சி ஏற்படாமலும், வயிற்று வலியாலும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால், மாணவியின் தாயார், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

Advertisement

அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனைக் கேட்டு மாணவியின் தாய் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, சம்பவம் தொடர்பாக அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், மாணவியிடம் விசாரணை நடத்திய போலீசார், கர்ப்பத்திற்கு காரணம் அறந்தாங்கி மணிவிளான் தெருவை சேர்ந்த தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனரான விக்னேஷ் (23) என்பவர் தான் என்பது தெரியவந்தது. மாணவியின் வாக்குமூலத்தில், ”தங்கள் வீட்டிற்கு செப்டிக் டேங்க் சுத்தம் செய்ய வரும்போது, விக்னேஷ் தன்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறினார். பின்னர், அவரது ஆசை வார்த்தைகளை நம்பி, இருவரும் நெருக்கமாக இருந்தோம். இதனால் தற்போது கர்ப்பமாக இருக்கிறேன்” என மாணவி கூறியுள்ளார்.

மாணவி அளித்த தகவலின் அடிப்படையில், தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனரான விக்னேஸ் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பள்ளி மாணவி ஒருவர் இளைஞரால் ஏமாற்றப்பட்டு ஆண் குழந்தை பிறந்து இறந்த நிலையில், அவரை ஏமாற்றியவர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொரு மாணவி இளைஞரால் கர்ப்பமடைய செய்யப்பட்டுள்ள சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : உலர் திராட்சையை இப்படி சாப்பிட்டு பாருங்க..!! ஏராளமான நன்மைகள்..!! அட உடல் எடையும் குறையுதாம்..!!

Tags :
ஓட்டுநர்பள்ளி மாணவிபாலியல் பலாத்காரம்புதுக்கோட்டை
Advertisement
Next Article