முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”உண்மையான குற்றவாளியை கைது பண்ணுங்க”..!! ஆம்ஸ்ட்ராங்கின் உடலை வாங்க மறுத்து ஆதரவாளர்கள் போராட்டம்..!!

Armstrong's supporters staged a protest in front of the hospital saying that they will not buy the body until the real culprits responsible for his murder are arrested.
09:51 AM Jul 06, 2024 IST | Chella
Advertisement

சமாஜ் கட்சியின் மாநில தலைவராக பல ஆண்டுகளாக இருக்கும் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்றிரவு அவரது வீட்டருகே ஆதரவாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது உணவு டெலிவரி செய்யும் நபர்கள் போல வந்த மர்ம கும்பல் இருசக்கர வாகனத்தில் அவரை சூழ்ந்து வெட்டி சாய்த்தது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆம்ஸ்ட்ராங் சம்பவ இடத்திலேயே நிலைகுலைந்து விழுந்தார். தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

இந்நிலையில், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஆம்ஸ்ட்ரங்கை அவரது ஆதரவாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் உயிரிழந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சென்னை மாநகர போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்கிடையே, கொலைக்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அங்கு பாதுகாப்பு பணிக்காக 800-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Read More : பழிக்கு பழி..!! ஆம்ஸ்ட்ராங் கொலையின் அதிரவைக்கும் பின்னணி..!! போலீசார் கூறும் அதிர்ச்சி தகவல்..!!

Tags :
ஆம்ஸ்ட்ராங்காவல்துறைகொலை வழக்குசென்னைபகுஜன் சமாஜ் கட்சி
Advertisement
Next Article