For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சொத்துக்களை வைத்து கடன் வாங்க நினைக்கிறீங்களா..? அப்படினா இந்த விஷயத்தை மறந்துறாதீங்க..!!

Those who have decided to take a loan with their property should definitely know the 5 things given in this post...
11:47 AM Aug 11, 2024 IST | Chella
சொத்துக்களை வைத்து கடன் வாங்க நினைக்கிறீங்களா    அப்படினா இந்த விஷயத்தை மறந்துறாதீங்க
Advertisement

சொத்துக்களை வைத்து கடன் வாங்க முடிவு செய்திருப்பவர்கள் இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ள 5 விஷயங்களை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க...

Advertisement

சொத்து மீதான கடன் :

குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் அதிக கடன் தொகை வழங்குவதால், சொத்து மீது கடன் வாங்குவது உங்கள் வணிகத்தை வளர்ப்பதற்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என்று துறை சார் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஆனாலும், உங்களுக்கான அனைத்து வாய்ப்புகளையும் மதிப்பீடு செய்து, உங்கள் நிதி மற்றும் வணிக இலக்குகளுக்கு பொருத்தமான ஒன்றைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்.

65% வரை கடன் கிடைக்கும் :

வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் உங்கள் சொத்து மதிப்பில் 65% வரை கடன் கொடுக்க வாய்ப்புள்ளது. சில சமயங்களில் ரூ.5 கோடி வரையும் கடன் கிடைக்கும். மேலும், மாதாந்திர திருப்பிச் செலுத்துதல் எளிதானது. கடன் வாங்கிய ரூ.1 லட்சத்திற்கு வழக்கமாக ரூ.750 முதல் ரூ.900 வரை செலுத்த வேண்டியிருக்கும். சில கடனளிப்பவர்கள் உங்கள் வணிகத் தேவைகளுக்கு ஏற்ப அதிக திருப்பிச் செலுத்தும் விருப்பங்களையும் வழங்குகிறார்கள்.

கணக்கீடுகள் அவசியம் :

சொத்தின் மீதான கடன் வாங்குவது என்பது பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. உதாரணமாக, வருமான வரிச் சட்டத்தின் 37(1) பிரிவின் கீழ் செலுத்தப்படும் வட்டி மற்றும் தொடர்புடைய கட்டணங்கள் ஆகியற்றுக்கு விலக்கு அளிக்கப்படுகின்றன. இருப்பினும், எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன், உங்கள் வணிகத்திற்கான சிறந்த விருப்பத்தைக் கண்டறிந்து, கிடைக்கக்கூடிய அனைத்து வாய்ப்புகளையும் ஒப்பிடுங்கள்.

குறைந்த வட்டி :

வட்டி விகிதங்கள் பொதுவாக குறைவாக இருக்கும். ஆண்டுக்கு 8 சதவிகிதத்தில் தொடங்கி, கடனைச் செலுத்துவதை எளிதாக்குகிறது. உங்கள் சொத்தை விற்பது போல் அல்லாமல், சொத்துக்கு எதிரான கடன் உங்கள் சொத்தின் மதிப்பு, கடன் வரலாறு மற்றும் வருமானத்தின் அடிப்படையில் உங்களுக்குத் தேவையான நிதியைப் பெற உதவுவதோடு, உங்கள் சொத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் உதவும்.

யாருக்கு நல்லது..?

உங்களது கடன் தீரும்போது, சொத்துக்களைத் தக்க வைத்துக்கொண்டு வணிகத்தையும் வளர்க்க விரும்புவோருக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு, உங்கள் நிதி நிலைமை மற்றும் வணிக இலக்குகளுக்கு சிறந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்.

Read More : தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 62ஆக உயர்வா..? பரபரப்பு விளக்கம்..!!

Tags :
Advertisement