முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

2025-ம் ஆண்டு பத்ம விருதுக்கு செப்டம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம்...!

09:21 AM May 02, 2024 IST | Vignesh
Advertisement

2025-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படவுள்ள அந்த ஆண்டின் பத்ம விருதுகளுக்கான ஆன்லைன் பரிந்துரைகள் தாக்கல் செய்வது இன்று தொடங்கியுள்ளது. பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை அனுப்ப கடைசி தேதி செப்டம்பர் 15 ஆகும் . பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் ராஷ்ட்ரிய புரஸ்கார் போர்ட்டலில் (https://awards.gov.in) ஆன்லைனில் பெறப்படும்.

Advertisement

பத்ம விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகியவை நாட்டின் மிக உயர்ந்த சிவிலியன் விருதுகளாகும். 1954 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படுகின்றன. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், சிவில் சேவை, வர்த்தகம் மற்றும் தொழில்துறை போன்ற அனைத்து துறைகள் / பிரிவுகளில் புகழ்பெற்ற மற்றும் சிறப்பான சாதனைகள் / சேவைகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

இனம், தொழில், பதவி அல்லது பாலின வேறுபாடின்றி அனைத்து நபர்களும் இந்த விருதுகளுக்கு தகுதியானவர்கள். மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தவிர, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் பத்ம விருதுகளுக்கு தகுதியற்றவர்கள்.

இது தொடர்பான விவரங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் (https://mha.gov.in) 'விருதுகள் மற்றும் பதக்கங்கள்' என்ற தலைப்பிலும், பத்ம விருதுகள் இணையதளத்திலும் (https://padmaawards.gov.in) உள்ளன. இவ்விருதுகள் தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிகள் இணையதளத்தில் https://padmaawards.gov.in/AboutAwards.aspx என்ற இணைப்புடன் வெளியிடப்பட்டுள்ளன.

Advertisement
Next Article