For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஜியோ வாடிக்கையாளர்கள் மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி..!! இனி இந்த பேசிக் ரீசார்ஜ் திட்டம் கிடையாதாம்..!!

Jio's popular plans such as Rs 395 and Rs 1559 prepaid plans have been removed by the company.
09:21 AM Jul 02, 2024 IST | Chella
ஜியோ வாடிக்கையாளர்கள் மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி     இனி இந்த பேசிக் ரீசார்ஜ் திட்டம் கிடையாதாம்
Advertisement

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக ஜியோ உள்ளது. இதன் வாடிக்கையாளர்கள் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்தியாவில் 5ஜி சேவையை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களில் 85 சதவிகிதம் பேர் ஜியோவின் வாடிக்கையாளர்கள் தான். இந்நிலையில், சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, ஜியோ நிறுவனம் அனைத்து ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்களையும் உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.

Advertisement

மேலும், இந்த கட்டண உயர்வு நாளை முதல் (ஜூலை 03) முதல் அமலுக்கு வருவதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பல ஜியோ வாடிக்கையாளர்கள் பழைய திட்டத்தில் ரீசார்ஜ் செய்து வரும் நிலையில், ஜியோவின் பிரபலமான பிளான்களான 395 ரூபாய், 1559 ரூபாய் ப்ரீபெய்டு திட்டங்களை நிறுவனம் நீக்கி உள்ளது.

ரூ.395 திட்டம் 84 நாட்கள் சேவையையும், ரூ.1,559 திட்டம் 365 நாட்களுக்கான சேவையையும் வழங்கி வந்தது. இந்த ரீசார்ஜ் திட்டங்கள் பேசிக் மாடல் போன் வைத்திருப்பவர்களிடம் மிகவும் பிரபலமாக இருந்தது. ஆனால், இந்த திட்டத்தை தற்போது ஜியோ நிறுவனம் நீக்கி உள்ளதால், வாடிக்கையாளர்கள் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Read More : இரவா..? பகலா..? உடலுறவு வைத்துக் கொள்ள எது சிறந்த நேரம்..? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா..?

Tags :
Advertisement