முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தமிழ்நாட்டில் மேலும் ஒரு பயங்கரம்..!! பாமக நிர்வாகி மீது கொலை வெறி தாக்குதல்..!! கடலூரில் பெரும் பரபரப்பு..!!

The incident in Cuddalore in which a gang of 4 members attacked Sivashankar, an administrator from Bamaga, with a sickle has created a lot of excitement.
06:23 PM Jul 06, 2024 IST | Chella
Advertisement

சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வந்தவர் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர், நேற்றிரவு அவரது வீட்டருகே ஆதரவாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது உணவு டெலிவரி செய்யும் நபர்கள் போல வந்த மர்ம கும்பல் இருசக்கர வாகனத்தில் அவரை சூழ்ந்து வெட்டி சாய்த்தது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆம்ஸ்ட்ராங் சம்பவ இடத்திலேயே நிலைகுலைந்து விழுந்தார்.

Advertisement

இந்நிலையில், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஆம்ஸ்ட்ரங்கை அவரது ஆதரவாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சென்னை மாநகர போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

அந்த வகையில், கடலூர் மாவட்டம் சூரப்பநாயக்கன் சாவடி பகுதியில் வசித்து வருபவர் பாமகவை சேர்ந்த நிர்வாகி சிவசங்கர். இவர் மீது 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அவர், கவலைக்கிடமான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிவசங்கர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More : BREAKING | ”அண்ணனின் பிறந்தநாளன்றே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தோம்”..!! கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்..!!

Tags :
கடலூர் மாவட்டம்கொலை வழக்குசென்னைபாமக நிர்வாகி
Advertisement
Next Article