For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Annamalai | ’நரேந்திர தத்தா விவேகானந்தராக மாறினார்’..!! ’பிரதமர் மோடி ஞானியாக மாறியுள்ளார்’..!! அண்ணாமலை பேச்சு..!!

02:28 PM Mar 15, 2024 IST | 1newsnationuser6
annamalai   ’நரேந்திர தத்தா விவேகானந்தராக மாறினார்’     ’பிரதமர் மோடி ஞானியாக மாறியுள்ளார்’     அண்ணாமலை பேச்சு
Advertisement

பிரதமர் நரேந்திர மோடி ஞானியாக மாறியுள்ளார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

Advertisement

நாடாளுமன்ற தேர்தலில் 3-வது முறையாக வெற்றி பெறும் முனைப்பில் உள்ள பிரதமர் மோடி, தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக அவர் அடிக்கடி தமிழகம் வந்து பிரச்சாரம் செய்கிறார். அந்த வகையில் இன்று மீண்டும் தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பாஜகவின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “கடந்த 1995ஆம் ஆண்டு நடைபெற்ற ஏக்தா யாத்திரை துவங்கிய போது பிரதமர் நரேந்திர மோடிக்கு முக்கிய பங்கு இருந்துள்ளது. அதனைத் தொடர்ந்து கடந்த 1892ஆம் ஆண்டில் கன்னியாகுமரிக்கு வந்த நரேந்திர தத்தா அங்குள்ள பாறையின் மீது அமர்ந்த பிறகு விவேகானந்தராக மாறினார். தற்போது இங்கு வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி ஞானியாக மாறியுள்ளார். அவர் தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு மத்தியில் ஆட்சியை அமைப்பார்” என அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Read More : ”தமிழ்நாட்டில் இருந்து DMK ஆட்சியை தூக்கணும்”..!! கன்னியாகுமரியில் சூளுரைத்த பிரதமர் மோடி..!!

Advertisement