For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பயங்கரம்.. காதலிக்க மறுத்த 11 ஆம் வகுப்பு மாணவியை உயிருடன் எரித்த காதலன்..!!

Andhra Pradesh is shocked by the incident where her boyfriend set fire to a 11th class student who refused to marry her.
04:37 PM Oct 20, 2024 IST | Mari Thangam
பயங்கரம்   காதலிக்க மறுத்த 11 ஆம் வகுப்பு மாணவியை உயிருடன் எரித்த காதலன்
Advertisement

காதலிக்க மறுத்த 11ஆம் வகுப்பு மாணவியை காதலன் தீ வைத்து எரித்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையே விக்னேஷிற்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடந்ததால் மாணவி தனது காதலை முறித்துக் கொண்டுள்ளார்.

வேறு பெண்ணை திருமணம் செய்த பிறகும் கூட தொடர்ந்து மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒருநாள் மாணவியை தனிமையில் சந்திக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் எனவும் விக்னேஷ் மிரட்டியுள்ளார். இதனால் விக்னேஷ் சொன்ன இடத்திற்கு மாணவி சென்ற நிலையில் அங்கு இருவருக்கும் தகறாரு ஏற்பட்டுள்ளது.

பின்னர் மாணவியை தாக்கி அவர் மீது பெட்ரோல் ஊற்றி லைட்டரால் விக்னேஷ் தீ வைத்துள்ளார். மாணவி அலறும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வர விக்னேஷ் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெண் அளித்த வாக்கு மூலத்தின் படி, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக, முதல்வர் சந்திரபாபு நாயுடு, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யுமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதிகாரிகளிடம் தொலைபேசியில் பேசி சிறுமியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். பாதிக்கப்பட்டவருக்கு சிறந்த சிகிச்சையை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். இருப்பினும் அவரது உடலில் 90 சதவீதம் தீக்காயம் ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கடப்பா காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். சிறுமியும் இளைஞரும் பத்வெல் நகரின் ஒரே பகுதியில் வசிப்பவர்கள் என்றும் சிறுவயதில் இருந்தே ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்.

Read more ; 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு கடலோர காவல் படையில் வேலை… எப்படி விண்ணப்பிப்பது ?

Tags :
Advertisement