For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பாமக வேட்பாளராக அன்புமணியின் மனைவி சௌமியா அறிவிப்பு..!! எங்கு போட்டியிடுகிறார்..?

07:12 AM Mar 23, 2024 IST | 1newsnationuser6
பாமக வேட்பாளராக அன்புமணியின் மனைவி சௌமியா அறிவிப்பு     எங்கு போட்டியிடுகிறார்
Advertisement

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் வேலைகள் வேகம்பிடித்து வருகின்றன. தமிழ்நாட்டில் ஒரேகட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை இங்கு 4 முனைப் போட்டி நிலவுகிறது. பெரும்பாலும் கூட்டணிகளின் தொகுதிப்பங்கீடுகள் முடிந்து வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்டனர். பிரச்சாரமும் களைகட்டி வருகிறது.

Advertisement

இந்நிலையில், பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவுக்கு காஞ்சிபுரம், அரக்கோணம், தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதையடுத்து, அதற்கான வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டன.

திண்டுக்கல் - கவிஞர் ம.திலகபாமாஅரக்கோணம் - வழக்கறிஞர் கே.பாலு,ஆரணி - முனைவர் அ.கணேஷ் குமார்கடலூர் - தங்கர் பச்சான்,மயிலாடுதுறை - ம.க.ஸ்டாலின்கள்ளக்குறிச்சி - இரா. தேவதாஸ் உடையார்,தருமபுரி - அரசாங்கம்சேலம் - ந. அண்ணாதுரைவிழுப்புரம் - முரளி சங்கர்காஞ்சிபுரம் - வெ.ஜோதி வெங்கடேசன்

இந்நிலையில், பாமக வேட்பாளர் பட்டியல் தொடர்பாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தருமபுரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த அரசாங்கம் என்பவருக்கு பதிலாக பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி போட்டியிடவுள்ளார்.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2024 மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தருமபுரி மக்களவைத் தொகுதியில் அரசாங்கம் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அவர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி P.hd., போட்டியிடுவார் என்று அறிவிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : விடுதலையாகிறாரா செந்தில் பாலாஜி..? வரும் 28ஆம் தேதி முடிவு..!! நீதிபதி அதிரடி..!!

Advertisement