For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தூள்..! மதுவிலக்கு பணியில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்கு விருது + ரூ.40,000 வழங்கப்படும்...!

An award + Rs.40,000 will be given to the police officers who have performed well in the prohibition
06:24 AM Oct 02, 2024 IST | Vignesh
தூள்    மதுவிலக்கு பணியில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்கு விருது   ரூ 40 000 வழங்கப்படும்
Advertisement

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Advertisement

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; முதலமைச்சர் அவர்கள் மதுவிலக்கு அமலாக்கப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக பெ.சின்னகாமணன், காவல் ஆய்வாளர், மத்திய நுண்ணறிவு பிரிவு விழுப்புரம் மண்டலம், கி.மகாமார்க்ஸ், தலைமை காவலர்-1989, விழுப்புரம் தாலுகா சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையம், விழுப்புரம் மாவட்டம், க.கார்த்திக், தலைமை காவலர்-2963, துறையூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, திருச்சி மாவட்டம்.

மேலும் கா.சிவா, இரண்டாம் நிலை காவலர்-1443, ஆயுதப்படை சேலம் மாவட்டம் மற்றும் ப.பூமாலை, இரண்டாம் நிலை காவலர் 764. ஆயுதப்படை, சேலம் மாவட்டம். ஆகியோருக்கு காவலர் விருது 2024-ஆம் வழங்க ஆண்டுக்கான உத்தரவிட்டுள்ளார்கள். இவ்விருது முதலமைச்சர் அவர்களால் 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் நாள் குடியரசு தினத்தன்று வழங்கப்படும். இவ்விருதுடன் பரிசுத்தொகையாக ரூ.40,000/- ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement