முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’எல்லா கோரிக்கையும் நிறைவேற்றியாச்சு’..!! ’95% பேருந்துகள் இயக்கம்’..!! அமைச்சர் சிவசங்கர் பரபரப்பு தகவல்..!!

10:21 AM Jan 09, 2024 IST | 1newsnationuser6
Advertisement

தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், பல மாவட்டங்களில் பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அரசியல் காரணங்களுக்காக போக்குவரத்து ஊழியர்கள் இந்த போராட்டத்தை நடத்துவது திசை திருப்புகின்ற செயல். குறிப்பாக இதற்கெல்லாம் யார் காரணமோ அந்த எடப்பாடி பழனிசாமி அணியோடு, அதிமுக தொழிற்சங்கத்தோடு சேர்ந்து கொண்டு வேலைநிறுத்தம் செய்வது மிகுந்த கவலைக்குரியது, கண்டனத்திற்குரியது. கடந்த 10 ஆண்டு காலத்தில் திமுக தொழிற்சங்கமான தொமுச மற்ற சங்கங்களுடன் துணை நின்று கோரிக்கைகளுக்காக போராடியது.

இன்றைக்கு உங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நாங்கள் துணை நிற்கிறோம் என்று தொமுச சொல்லியிருக்கிறது. அதற்கான நேர அவகாசம் தான் கேட்கிறோம். இது பொங்கல் நேரம். மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் நேரம். சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இந்த நேரத்தில் ஒரு போராட்டம் என்பது பொதுமக்களுக்கு இடைஞ்சல் தரக்கூடியது.

நீங்கள் வைத்த கோரிக்கையை எல்லாம் முதலமைச்சர் முக.ஸ்டாலின் நிறைவேற்றி இருக்கிறார். நீங்கள் சொன்ன 6 கோரிக்கைகளில் ஒரு கோரிக்கையை நிறைவேற்றத்தான், கால அவகாசம் கேட்கிறோம். இன்றைக்கு போக்குவரத்து சுமூகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. யாரும் இடைஞ்சல் செய்ய வேண்டாம். 95 சதவீதத்துக்கு மேல் அரசு பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒரு சில மாவட்டங்களில் கனமழை காரணமாக போக்குவரத்து தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. முதல்வர் உத்தரவுப்படி பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாதபடி போக்குவரத்து ஊழியர்கள் பேருந்துகளை இயக்கிக் கொண்டிருக்கின்றனர்” என்றார்.

Tags :
கோயம்பேடுதமிழ்நாடு அரசுபொங்கல் பண்டிகைபோக்குவரத்துத்துறை
Advertisement
Next Article