முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அடுத்த 40 நாட்களுக்கு இதை செய்ய வேண்டும்...! கைதான நடிகைக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு...!

05:30 AM Nov 05, 2023 IST | 1newsnationuser2
Advertisement

பேருந்தில் தொங்கியபடி சென்ற மாணவர்களை அடித்த புகாரில் கைதான நடிகை ரஞ்சனா நாச்சியாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

சென்னை அருகே கெருகம்பாக்கம் பகுதியில் சென்ற மாநகர அரசுப் பேருந்தில் படியில் தொங்கியபடி மாணவர்கள் சிலர் பயணித்தனர். அப்போது அந்த வழியாக தனது வாகனத்தில் வந்த நடிகை ரஞ்சனா நாச்சியார் பேருந்தை ஓவர்டேக் செய்து வழிமறித்து நிறுத்தியுள்ளார். பின்னர் மாணவர்களை சரமாரியாகத் திட்டியுள்ளார். படியில் தொங்கியபடி பயணம் செய்ததைக் கண்டித்த அவர், மாணவர்களை இறக்கிவிட்டதோடு மட்டுமல்லாது அவர்களைத் தாக்கியும் உள்ளார். மேலும் பேருந்து ஓட்டுநர், நடத்துநரை ஒருமையில் பேசி சண்டை இழுத்துள்ளார். இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

Advertisement

இதையடுத்து நடிகை ரஞ்சனா மீது அரசுப் பேருந்து ஓட்டுநர் சரவணன் போலீஸில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் நேற்று மாங்காடு போலீஸார் ரஞ்சனாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இந்த வழக்கில் நடிகை ரஞ்சனா நாச்சியாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேருந்தில் தொங்கியபடி சென்ற மாணவர்களை அடித்த புகாரில் கைதான நடிகை ரஞ்சனா நாச்சியாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. 40 நாட்கள் காலை, மாலையில் மாங்காடு காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். ரஞ்சனா மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கெருகம்பாக்கத்திலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று காலை போலீசார் கைது செய்தனர். கைது செய்து விசாரணை நடத்திய போலீசார் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

Tags :
arrestBailRanjana nachiyartn police
Advertisement
Next Article