For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

குவிந்து கிடக்கும் அந்தரங்க புகைப்படங்கள்..!! அதிர்ச்சியில் திகைத்த நீதிபதி..!! ஐகோர்ட்டை அலறவிட்ட பெண்..!! நடந்தது என்ன..?

07:19 AM Jan 31, 2024 IST | 1newsnationuser6
குவிந்து கிடக்கும் அந்தரங்க புகைப்படங்கள்     அதிர்ச்சியில் திகைத்த நீதிபதி     ஐகோர்ட்டை அலறவிட்ட பெண்     நடந்தது என்ன
Advertisement

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஆர்த்தி என்பவர் ஐகோர்ட் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ”எனக்கும் விவேக்ராஜ் என்பவருக்கும் திருமணமாகி சேர்ந்து வாழ்ந்து வந்தோம். எனது கணவரின் செல்போனை பார்த்த போது அதில் பல பெண்களிடம் ஆபாச வீடியோ கால் ஸ்கிரீன்ஷாட் மற்றும் அந்தரங்க உறுப்புகளின் புகைப்படங்களை வைத்திருந்தார். தனது கணவர் வங்கியில் வேலை பார்ப்பதால் அங்கு வரும் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளிடம் பேசி சுமார் 500 முதல் 1,000 ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்துள்ளார்.

Advertisement

இதுபற்றி அவரது குடும்பத்தாரிடம் கூறியபோது, இதைப் பற்றி வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்று என்னை மிரட்டினர். தன்னை 2 மாத கர்ப்பிணி என்று கூட பாராமல் அடித்து துன்புறுத்தியதால் கரு சிசுவிலேயே கலைந்துவிட்டது. இது தொடர்பாக தஞ்சை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆகையால், எனது கணவர் மீது அளிக்கப்பட்ட புகார் மீது தஞ்சை மகளிர் போலீசார் உரிய விசாரணை நடத்த வாய்ப்பில்லாததால் அவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும். அதோடு இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு குறித்து தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் சிபிசிஐடி தரப்பு காவல்துறையினர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags :
Advertisement