முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

4 மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்... கொட்ட போகும் அதி கனமழை...!

According to the Meteorological Department, there is a chance of rain in Tamil Nadu from today to the 6th.
06:33 AM Aug 03, 2024 IST | Vignesh
Advertisement

வயநாடு, கண்ணூர், கோழிக்கோடு, காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 6-ம் தேதி வரை இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கிமீ வேகத்தில் வீசக்கூடும். 7 மற்றும் 8-ம் தேதிகளில் மாநிலத்தில் பல பகுதிகளில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Advertisement

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 4-ம் தேதி வரை சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ, வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.

கேரள மாநிலத்தில் இன்று மற்றும் நாளை 7 முதல் 11 செ.மீ. வரையிலான கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வயநாடு, கண்ணூர், கோழிக்கோடு, காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Tags :
Keralarainrain alertYellow
Advertisement
Next Article