Bikkini உடையோடு பேருந்தில் ஏறிய பெண்; பார்த்து பதறிய மக்கள்.. வைரலாகும் வீடியோ!
டெல்லியில் கூட்டம் நிறைந்த பேருந்தில் பெண் ஒருவர் பிகினி ஆடை என சொல்லப்படும் நீச்சல் உடையில் பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
டெல்லி நகரத்தில் கூட்டம் நிரம்பிய பேருந்தில் பெண் ஒருவர் பிகினி ஆடையோடு ஏறி பயணம் மேற்கொண்டு உள்ளார். அவரது உடையைப் பார்த்து திகைத்து அருகில் இருந்த ஒரு பெண் பயணி அவரிடமிருந்து விலகி சென்றார். அதேபோல அந்தப் பெண்ணின் முன் அமர்ந்திருந்த மற்றொரு பயணியும் தனது இருக்கையை விட்டு வெளியேறினார். இந்த பெண்ணின் செயலை பேருந்தின் கதவருகே இருந்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட இந்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
’பொதுவில் இப்படித்தான் உடை அணிய வேண்டுமா... இதுதான் பல பிரச்சினைகளுக்குக் காரணம்’ எனவும் ‘சோஷியல் மீடியாவில் கவன ஈர்ப்புக்காக இப்படிச் செய்ய வேண்டுமா? இது முட்டாள் தனம்’என சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, ‘உடை என்பது அவருடைய விருப்பம். இதில் எதிர்ப்புத் தெரிவிக்க எதுவும் இல்லை’ என சிலர் ஆதரவு தெரிவித்தும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், டெல்லி காவல்துறையை இந்த வீடியோவில் டேக் செய்திருக்கும் நெட்டிசன்கள் இந்தப் பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்கு முன்பு, நாக்பூர் சாலையில் நள்ளிரவு 2 மணியளவில் நிர்வாணமாக ஒரு நபர் தனது ஸ்கூட்டரில் செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.