For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அந்தரங்க வீடியோ.. அக்ரீமெண்ட் போட்டு பலாத்காரம்..!! - பகீர் சம்பவத்தின் பின்னணி என்ன?

09:29 AM Sep 06, 2024 IST | Mari Thangam
அந்தரங்க வீடியோ   அக்ரீமெண்ட் போட்டு பலாத்காரம்       பகீர் சம்பவத்தின் பின்னணி என்ன
Advertisement

உல்லாச வீடியோவைக் காட்டி மிரட்டி, அக்ரீமெண்ட் போட்டு பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.

Advertisement

மும்பையில் வசித்து வரும் 29 வயதுடைய இளம்பெண் ஒருவருக்கும், 46 வயதுடைய நபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் லிவ்-இன்-டுகெதர் உறவில் இருந்து வந்துள்ளனர். அப்போது அந்த நபருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதும், அவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பதும் அந்த பெண்ணிற்கு தெரிய வந்தது. இதனால், அந்த பெண் தனது உறவை முறித்துக் கொள்ளவதாக அந்த நபரிடம் கூறியுள்ளார்.

அப்போது தான் அந்த அவரின் சுயரூபம் தெரிந்தது. அந்த பெண்ணுடன் தனிமையில் இருந்த வீடியோவைக் காட்டி, மிரட்டியுள்ளான். என்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும். இங்கிருந்து செல்ல முயன்றாள் வீடியோவை லீக் செய்துவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளான். தொடர்ந்து அந்த பெண்ணை பல முறை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியுள்ளான். இது குறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அந்த நபரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் தான் கைது செய்யப்படாமல் இருக்க அந்த நபர் முன்ஜாமின் கோரி நீதிமன்றத்தை நாடினார்.

அப்போது அவர்கள் இருவரும் லிவிங் டுகெதர் உறவை 11 மாதங்கள் அதாவது ஆகஸ்ட் 1 2024 முதல் ஜூன் 30 2025 வரை தொடர அந்தப் பெண் ஒப்பதம் செய்துள்ளதாக ஆதாரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பத்தார். அந்த அக்ரீமெண்டில் பெண்ணின் கையெழுத்து இருப்பதாக அந்த நபரின் வக்கீல் வாதாடினார். எனவே இது ஆதாரமாக ஏற்றும், சம்பந்தப்பட்ட பெண் அந்தரங்க வீடியோக்களுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்காததால் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது.

Read more ; செம குட் நியூஸ்..!! பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு..!! எப்போது தெரியுமா..? ஆட்சியர் உத்தரவு..!!

Tags :
Advertisement