முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சர்ச்சில் வைத்து 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார்..!! முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார்..!! பாய்ந்தது போக்சோ..!!

The incident of the priest sexually harassing a 14-year-old girl who was staying in the church has created a lot of excitement.
06:18 PM Jul 04, 2024 IST | Chella
Advertisement

சர்ச்சில் தங்கியிருந்த 14 வயது சிறுமிக்கு பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். தாயார் உயிரிழந்து விட்ட நிலையில், தனது அக்கா மற்றும் தந்தையுடன் வசித்து வருகிறார். சிறுமியின் அக்கா அப்பகுதியில் உள்ள சர்ச் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இதனால், சிறுமியும் அடிக்கடி சர்ச்சிற்கு சென்று வருவார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி சர்ச்சில் ஒருவாரம் தங்கியதாக சொல்லப்படுகிறது. அப்போது அந்த சர்ச்சில் பாதிரியாராக இருக்கும் தேவ இரக்கம், சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

மேலும், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த சிறுமி, கத்தி கூச்சல் போட்டுள்ளார். மேலும், உடனடியாக தனது வீட்டிற்கு சென்றுள்ளார். சிறுமிக்கு சர்ச்சில் வைத்து பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்த தகவல் அப்பகுதி மக்களுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, உடனடியாக பொதுமக்கள் சிலர் முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளனர். இதைதொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு இந்த புகார் மனு சென்றுள்ளது.

புகாரின் அடிப்படையில், அவர் விசாரணை நடத்தியுள்ளார். விசாரணையில் உண்மை தெரியவந்ததை அடுத்து, காஞ்சிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சக்தி பிரியா புகார் அளித்தார். அதன் பேரில் பாதிரியார் தேவ இரக்கம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். காஞ்சிபுரத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பாதிரியார் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More : மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! உங்களுக்கு பணம் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா..?

Tags :
பாதிரியார்போக்சோ வழக்கு
Advertisement
Next Article