For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நண்பர்களுடன் ஹோட்டலுக்கு சென்ற காதலி.. பறிபோன காதலன் உயிர்!! - நடந்தது என்ன?

A person has died in a dispute that occurred after the girl's boyfriend reprimanded his girlfriend who had gone to a hotel with her male friend
08:24 AM Jul 25, 2024 IST | Mari Thangam
நண்பர்களுடன் ஹோட்டலுக்கு சென்ற காதலி   பறிபோன காதலன் உயிர்     நடந்தது என்ன
Advertisement

ஆண் நண்பர்களுடன் ஹோட்டலுக்கு சென்ற காதலியை, பெண்ணின் காதலன் கண்டித்ததால், ஏற்பட்ட தகறாரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Advertisement

மதுரையை சேர்ந்த ரஞ்சித் (32). மற்றும் ராஜா உசேன் (43) ஆகிய இருவரும், மூன்று பெண்களுடன் நட்பில் இருந்து வந்தனர். இதில் ஒரு பெண்ணின் பிறந்தநாளை நேற்று முன்தினம் மதுரை கேகே நகரில் உள்ள ஒரு ஓட்டலில் கொண்டாடினர். பின்னர், நத்தம் ரோட்டில் காஞ்சரம்பேட்டை அருகே மற்றொரு ஓட்டலுக்கு காரில் சென்றனர். அதனை அறிந்த ஒரு பெண்ணின் காதலன் சரவணக்குமார், தனது நண்பர்களுடன் ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.

அங்கு தன் காதலி ஆண் நண்பர்களுடன் இருப்பதை கண்ட சரவணக் குமார், தகறாரில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட மோதலில் ரஞ்சித், ராஜா உசேன் சேர்ந்து சரவணக்குமார், மற்றும் அவரது நண்பன் இஷாக்கை தொடை மற்றும் இடுப்பு பகுதியில் கத்தியால் சரமாரியாக குத்தினர்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை இஷாக் பரிதாபமாக இறந்தார். சரவணக்குமார் படுகாயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து, ரஞ்சித், ராஜா உசேன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், இதுகுறித்து 3 இளம்பெண்களிடமும் விசாரணை நடந்து வருகிறது.

Read more ; Engineering Counselling | இதர சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு இன்று தொடக்கம்..!!

Tags :
Advertisement