முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பதற வைக்கும் சம்பவம் .! 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! கொலை முயற்சியில் ஈடுபட்ட சிறுவன்.!

09:24 AM Feb 19, 2024 IST | 1newsnationuser4
Advertisement

உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. அந்த மாவட்டத்தைச் சார்ந்த சிறுவன் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நிகழ்வு பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

உத்திரபிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் மாவட்டத்தில் உள்ள கேரி என்ற ஊரில் இரண்டு சிறுமிகள் வீட்டின் மாடியில் விளையாண்டு கொண்டிருந்துள்ளனர் . அப்போது சிறுமிகள் வைத்து விளையாடிய பலூன் கீழே விழுந்திருக்கிறது. இதனை எடுப்பதற்காக சிறுமிகள் சென்ற போது அங்கிருந்த சிறுவன் ஒருவன் 7 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ய முயன்று இருக்கிறான்.

இதற்கு அந்த சிறுமி மறுக்கவே அவரை கொலை செய்ய முயன்றிருக்கிறான். இது தொடர்பாக சத்தம் கேட்டு சிறுமியின் பெற்றோர் வந்து அந்த சிறுமியை காப்பாற்றி இருக்கின்றனர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். சிறுவனின் இந்த நடவடிக்கை அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் சிறுவர்கள் குற்றச்செயலில் ஈடுபடுவதும் அதிகரித்திருக்கிறது. இது போன்ற செயல்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என பெற்றோரும் பொது மக்களும் காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர். மேலும் சிறுவர்கள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவது பெற்றோரை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

English Summary: A minor boy try to sexually assault and murder a 7 year old girl shocks uttar pradesh. Police are investigating that matter.

Tags :
7 Year Old GirlcrimeMinor boysexual assaultshocking incidentuttar pradeshYogiAdhityanath
Advertisement
Next Article