For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பயங்கரம்... சென்டர் மீடியனில் இருந்த இரும்பு கம்பி பெண்ணின் கையில் குத்தியது...!

A metal bar in the center median pierced the woman's arm
06:42 AM Jul 01, 2024 IST | Vignesh
பயங்கரம்    சென்டர் மீடியனில் இருந்த இரும்பு கம்பி பெண்ணின் கையில் குத்தியது
Advertisement

சென்னையில் சாலை சென்டர் மீடியனில் நீண்டு கொண்டிருந்த இரும்பு கம்பி பெண்ணின் கையில் குத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பவித்ரா மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்தவர் விக்னேஷ் இருவரும் சென்னை வேப்பேரியில் உள்ள பழமுதிர்சோலையில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு இருவரும் இருசக்கர வாகனத்தில் வேப்பேரியில் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். இருசக்கர வாகனத்தை பவித்ரா ஓட்டி சென்ற நிலையில், விக்னேஷ் பின் இருக்கையில் அமர்ந்திருந்தார்.

திடீரென்று பவித்ராவின் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலை நடுவே உள்ள சென்டர் மீடியனில் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பவித்ரா மற்றும் விக்னேஷ் ஆகிய 2 பேரும் கீழே விழுந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பவித்ராவின் கையில் சாலை சென்டர் மீடியனில் நீண்டு கொண்டிருந்த இரும்பு கம்பி குத்தியது.

கையின் ஒரு பகுதியில் குத்தி மறுபுறமாக அந்த கம்பி வெளியே வந்தது. இதையடுத்து உடனடியாக காவல்துறையில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து பவித்ராவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

Tags :
Advertisement