For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பிளஸ்2 மாணவியை காதல் வலையில் வீழ்த்திய பெண் பயிற்சியாளர்..!! ஓரிரு மாதங்களில் ஆணாக மாறிவிடுவாராம்..!! பரபரப்பு சம்பவம்..!!

In a few months, the female karate coach is planning to move to the North and become a man.
10:22 AM Oct 24, 2024 IST | Chella
பிளஸ்2 மாணவியை காதல் வலையில் வீழ்த்திய பெண் பயிற்சியாளர்     ஓரிரு மாதங்களில் ஆணாக மாறிவிடுவாராம்     பரபரப்பு சம்பவம்
Advertisement

சென்னை பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 16 வயது சிறுமி ஒருவர், பிளஸ் 2 படித்து வருகிறார். மாணவிக்கு கராத்தே பயிற்சி பெற வேண்டும் என்று ஆசை இருந்துள்ளது. இதற்காக பெரம்பூர் பகுதியில் உள்ள ஒரு கராத்தே பயிற்சி வகுப்பில் மாணவி சேர்ந்துள்ளார். அங்கு தொடர்ந்து பயிற்சி பெற்று வந்துள்ளார். மாணவிக்கு 27 வயதான திருமணம் ஆகாத பெண் கராத்தே வீரர் பயிற்சி அளித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 17ஆம் தேதி கராத்தே பயிற்சிக்கு சென்ற மாணவி, அதன்பின் வீடு திரும்பவில்லை.

Advertisement

இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். ஆனால், எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதற்கிடையே, கராத்தே பயிற்சி பள்ளியில் படித்தவர்களிடம் விசாரித்தபோது, கராத்தே பெண் பயிற்சியாளர், மாணவியிடம் நெருங்கி பழகியதும், திருமணம் செய்வற்காக கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெரம்பூர் மாணவியின் தாயார், உடனடியாக திரு.வி.க.நகர் போலீசில் புகாரளித்தார்.

இதையடுத்து, மாணவியின் செல்போன் எண் கடைசியாக எங்கிருந்தது என்பதை ஆய்வு செய்தனர். அதில் மாணவி, கராத்தே பெண் பயிற்சியாளரின் சொந்த ஊரான தூத்துக்குடி ஆறுமுகநேரியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் மாணவியை பத்திரமாக மீட்டனர். பின்னர், பெண் கராத்தே பயிற்சியாளர், மாணவியை சென்னை அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில், பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது.

தூத்துக்குடி ஆறுமுகநேரியைச் சேர்ந்த பெண் கராத்தே பயிற்சியாளர், தன்னிடம் கராத்தே பழக வந்த மாணவியுடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்திருக்கிறார். இன்னும் சில மாதங்களில் அந்த பெண் கராத்தே பயிற்சியாளர் வடமாநிலம் சென்று ஆணாக மாற திட்டமிட்டுள்ளார். அதன்பிறகு மாணவியை சட்டப்பூர்வமாக திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். இதை விசாரணையில் தெரிந்து கொண்ட போலீசார், பிளஸ் 2 மாணவிகளுக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

இந்த வழக்கு குறித்து போலீசார் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய போலீசார், பெண் கராத்தே பயிற்சியாளர் மீது கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : 2026இல் நம்ம தான்..!! பூவை தேடி தேனீக்கள் வருவது போல அதிமுகவை தேடி கூட்டணி கட்சிகள் வரும்..!! எடப்பாடி பழனிசாமி பேச்சு..!!

Tags :
Advertisement