முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சென்னையில் 15 வயது சிறுவனுடன் உல்லாசமாக இருந்த 30 வயது பெண்..! ரகசிய திருமணம்..!

30 year girl married 15 year boy... that boy parents complaint police...
09:10 AM Jul 17, 2024 IST | Shyamala
Advertisement

சென்னையில் 15 வயது சிறுவனை 30 வயது பெண் காதலித்து திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த 30 வயது இளம்பெண், துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இதனிடையே, குடும்ப சூழல் காரணமாக, 15 வயதான சிறுவன் ஒருவனும் அந்த கடையில் வேலைக்குச் சேர்ந்து பணியாற்றி வந்தான்.

Advertisement

அப்போது ஒரே கடை ஊழியர்கள் என்ற விதத்தில், அந்த பெண்ணும் சிறுவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அவர்கள் நெருங்கிப் பழக தொடங்கியுள்ளனர். இதற்கிடையே, இளம்பெண்ணுக்கு சிறுவனுக்கும் இடையிலான பழக்கம், காதலாக மாறியது.

இதனையடுத்து, அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். மேலும், பல்வேறு இடங்களுக்கு சென்று இருவரும் உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இளம்பெண்ணும், சிறுவனும் நெருக்கமாக பழகுவது உடன் வேலை செய்யும் சக ஊழியர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, சிறுவனின் பெற்றோரிடம் அவர்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, சிறுவனின் பெற்றோர் ரகசியமாக கண்காணிக்க தொடங்கினர். அப்போது இளம்பெண்ணும், சிறுவனும் காதலித்து வந்தது தெரியவந்தது. இதனையறிந்த இளம்பெண், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுவனை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.

மேலும், சிறுவனை அழைத்துக்கொண்டு வெளியூர் தப்பிச்செல்ல இளம்பெண் முடிவு செய்துள்ளார். இதையறிந்த சிறுவனின் பெற்றோர், இளம்பெண்னிடம் இருந்து அந்த சிறுவனை மீட்டனர். இது குறித்து சிறுவனின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர். இதனையடுத்து, சிறுவனை கடத்த முயன்றதாக குழந்தைகள் நல ஆணையம் விசாரணை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

read more... மருத்துவமனையில் நோயாளி-யை பாலியல் வன்கொடுமை செய்த செவிலியர் கைது..!!

Tags :
affair newsaffair news in tamilcrime newsTN news
Advertisement
Next Article