ரூம் எடுத்து தங்கிய 17 வயது ஜோடி..!! மாணவிக்கு அதிகளவு ரத்தப்போக்கு..!! பதறியடித்து ஓடிய மாணவன்..!! கடைசியில் நடந்த சோகம்..!!
தஞ்சை மாவட்டம் மதுக்கூரை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவியும், மயிலாடுதுறை பூம்புகாரை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவரும் கும்பகோணம் மோதிலால் தெருவில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இருவருமே உறவினர்கள் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, சிறிது நேரத்திலேயே அந்தப் மாணவன் அறையில் இருந்து ஓடி வந்து அந்த லாட்ஜில் இருந்தவர்களிடம், மாணவிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவி செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அந்த மாணவியை ஆட்டோவில் ஏற்றி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்கள் இருவரையும் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியதன் பேரில், அரசு மருத்துவமனைக்கு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்யும் போது அந்தப் பெண் ஏற்கனவே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவிக்கவே, உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து தடய அறிவியல் துறை அதிகாரிகள், அந்த மாணவி தங்கியிருந்த அறையில் சோதனை நடத்தி தடயங்களை சேகரித்தனர். முதற்கட்ட விசாரணையில் இருவரும் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும், கும்பகோணத்திற்கு அந்த பெண் வந்ததும் மாதவிடாய் ஏற்பட்டதாகவும், குளித்துவிட்டு வேறு உடை மாற்றிக் கொள்ள அறை எடுத்து தங்கியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், பிரேத பரிசோதனைக்கு பின்னரே அந்த மாணவியின் மரணம் தொடர்பான உண்மை காரணம் வெளிச்சத்திற்கு வரும்.
Read More : புகாரளித்த பெண்.!! சற்றும் யோசிக்காமல் அமைச்சர் செய்த செயல்..!! ரேஷன் கடைகளுக்கு பறந்த உத்தரவு..!!