For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

#Breaking News: கனமழைக்கு பலியான 12ஆம் வகுப்பு மாணவன்.! நாகை அருகே சோகம்.!

05:39 PM Jan 08, 2024 IST | 1newsnationuser7
 breaking news  கனமழைக்கு பலியான 12ஆம் வகுப்பு மாணவன்   நாகை அருகே சோகம்
Advertisement

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆங்காங்கே அசம்பாவித சம்பவங்களும் ஏற்பட்டு வருகின்றன இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கனமழைக்கு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. நாகப்பட்டினத்தில் 12-ஆம் வகுப்பு படித்து வரும் அஜீஸ் என்ற மாணவன் பள்ளி விடுமுறை என்பதால் தனது வீட்டில் இருந்திருக்கிறான். அப்போது கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து மாணவன் படுகாயம் அடைந்துள்ளான்.

இதனைத் தொடர்ந்து மாணவனை மீட்டபெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு மாணவன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் 17 வயது மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :
Advertisement