For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'50' வயது மாற்றுத்திறனாளி பெண் கொடூர கொலை.!! பாலியல் உறவுக்கு இணங்க மறுத்ததால் ஆத்திரம்.! '17' வயது மாணவன் வெறி செயல்.!

06:47 PM Feb 15, 2024 IST | 1newsnationuser7
 50  வயது மாற்றுத்திறனாளி பெண் கொடூர கொலை    பாலியல் உறவுக்கு இணங்க மறுத்ததால் ஆத்திரம்    17  வயது மாணவன் வெறி செயல்
Advertisement

சேலம் மாவட்டத்தில் 50 வயது பெண் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள குறுக்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாயி(50). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் மகள் திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த பெருமாயி கடந்த 11-ம் தேதி இரவு தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையில் அப்பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் மாணவன் பெருமாயி வீட்டிற்குள் நுழைந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மாணவனை பிடித்து விசாரித்ததில் பெருமாயியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டான். பள்ளி மாணவன் வீட்டில் தனியாக இருந்த பெருமாயியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று இருக்கிறான்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெருமாயி மாணவனை கீழே தள்ளிவிட்டு வெளியே ஓட முயன்றிருக்கிறார். பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதை வெளியே சொல்லி விடுவாரோ என்ற பயத்தில் பெருமாயியை கீழே தள்ளி அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக மாணவன் தெரிவித்துள்ளான். இதனைத் தொடர்ந்து அவனை கைது செய்த காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :
Advertisement