For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சற்று முன்: 30-ம் தேதி வரை சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமலில் இருக்கும்...!

08:43 AM Jan 21, 2024 IST | 1newsnationuser2
சற்று முன்  30 ம் தேதி வரை சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமலில் இருக்கும்
Advertisement

குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் 30-ம் தேதி நள்ளிரவு வரை சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமலில் இருக்கும்

ஆண்டுதோறும் ஜனவரி 26-ம் நாள் குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை நடைபெறும். இந்த அணிவகுப்பை காண்பதற்காக வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாகவும், பொதுமக்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

Advertisement

அதே போல ஜனவரி 26-ம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்தியாவின் அழைப்பை ஏற்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக வருவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழகத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் 30-ம் தேதி நள்ளிரவு வரை சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமலில் இருக்கும். அதே போல வரும் 24, 25 மற்றும் 26 ஆகிய நாட்களில் மட்டும் 7 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட உள்ளது.

Tags :
Advertisement