முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

39,924 ஓட்டுநர் உரிமம் ரத்து...! தமிழக காவல்துறை அதிரடி நடவடிக்கை...! இது தான் காரணம்...!

39,924 driving licenses were suspended in Tamil Nadu
10:33 AM Sep 30, 2024 IST | Vignesh
Advertisement

தமிழகத்தில் 39,924 எண்ணிக்கையிலான ஓட்டுநர் உரிமம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தமிழகத்தில் நடப்பு ஆண்டு ஜூலை மாதம் வரை 10,066 விபத்து வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. இந்த விபத்துக்களில் 10,536 பேர் உயிரிழந்தனர். கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை 10,589 விபத்துக்களில் 11,106 பேர் உயிரிழந்திருக்கின்றனர். தமிழக காவல்துறையின் விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளின் காரணமாக 5 சதவீத உயிரிழப்புகள் தடுக்கப்பட்டு இருக்கிறது.

Advertisement

இதேபோல், நடப்பு ஆண்டு ஜூலை மாதம் வரை, அதிக வேகத்தில் வாகனம் ஓட்டியதாக1 லட்சத்து 5,097 வழக்குகளும், சிக்னலில் நிற்காமல் சென்றதாக1 லட்சத்து 35,771 வழக்குகளும், வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தியதாக 2 லட்சத்து 31,624 வழக்குகளும், மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 1 லட்சத்து 13,270 வழக்குகளும் அதிக பாரம்ஏற்றி வந்ததாக 6,946 வழக்குகளும் சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றி சென்றதாக 74,013 வழக்குகளும் என மொத்தம் 6 லட்சத்து 66,721 வழக்குகள் பதிவாகின. மேலும், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாக 35 லட்சத்து 78,763 வழக்குகள், சீட் பெல்ட் அணியாமல் ஓட்டியதாக 3 லட்சத்து 39,434 வழக்குகள் எனமொத்தம் 39 லட்சத்து 18,197 வழக்குகள் பதிவாகி உள்ளன.

மேலும், மோட்டார் வாகன சட்டத்தை மீறியதற்காக 35 லட்சத்து78,763 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேநேரத்தில் மோட்டார் வாகன விதிகளை மீறிய 1 லட்சத்து 82,375 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலருக்கு (ஆர்டிஓ) பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன. 39,924 எண்ணிக்கையிலான ஓட்டுநர் உரிமம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Licencelicenses were suspendedtn governmentTransport department
Advertisement
Next Article