For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

புதருக்குள் 14 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 3 பேர்..!! உருட்டுக் கட்டையுடன் தேடிய மக்கள்..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!

The girl was allegedly gang-raped by the three men.
07:47 AM Sep 23, 2024 IST | Chella
புதருக்குள் 14 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 3 பேர்     உருட்டுக் கட்டையுடன் தேடிய மக்கள்     கடைசியில் நடந்த ட்விஸ்ட்
Advertisement

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே மாம்பாக்கம் சமத்துவபுரம் பகுதியில் வசிக்கும் 9ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவி மலம் கழிக்க புதர் பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 3 பேர் அவரிடம் பேச்சு கொடுத்த நிலையில், திடீரென அவர்களில் ஒருவர் சிறுமியின் வாயில் துணியை வைத்து அழுத்தினார். மற்ற இருவரும் அந்த சிறுமியை இழுத்துச் சென்றுள்ளனர். பின்னர் 3 பேரும் சேர்ந்து அந்த சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

Advertisement

பின்னர், அவர்கள் மூவரும் தப்பியோடிய நிலையில், சிறுமி அழுது கொண்டே வந்தார். இதையடுத்து, அவரிடம் நடந்த விவரத்தை கேட்டறிந்த அப்பகுதி மக்கள், உருட்டுக்கட்டையுடன் மூவரையும் வலைவீசி தேடினர். இரண்டு பேர் தப்பியோடிய நிலையில், ஒருவரை மட்டும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி ரத்தினமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் சிறுமி கூட்டு செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கு வழக்கு சிட்லபாக்கம் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இன்ஸ்பெக்டர் கீதா வழக்குப்பதிவு செய்து மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த சுந்தர் (21), 2 சிறுவர்கள் (16) ஆகிய 3 பேரை கைது செய்து பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்து சோழிங்கநல்லூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : திடீரென மருத்துவமனைகளுக்கு படையெடுக்கும் சென்னை மக்கள்..!! என்ன பிரச்சனை..? எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!

Tags :
Advertisement