முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இந்த மாவட்டத்திற்கு வரும் 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு..!!

08:50 AM Dec 14, 2023 IST | 1newsnationuser6
Advertisement

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

நீலகிரி மாவட்டத்தில், பெரும்பான்மையாக வசித்து வரும் படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். குன்னூர் அருகே உள்ள ஜெகதலாவை தலைமையிடமாக கொண்டு காரக்கொரை, போதனெட்டி, பேரொட்டி, வள்ளிக்கரை, மஞ்சுதலா, சின்ன பிக்கட்டி, பெரிய பிக்கட்டி என 8 கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த திருவிழாவை கொண்டாடி மகிழ்கின்றனர்.

ஹெத்தையம்மன் கோயில் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 27ஆம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக ஜனவரி 6ஆம் தேதி பணிநாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவு பிறப்பித்துள்ளார். ஹெத்தையம்மன் பண்டிகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்படும். மேலும் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
உள்ளூர் விடுமுறைதிருவிழாநீலகிரி மாவட்டம்மாணவர்கள்
Advertisement
Next Article