For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அண்ணணே சொந்த தங்கையை நண்பர்களுடன் துடிக்க துடிக்க கூட்டு பாலியல் வன்புணர்வு.!! 5 பேர் கைது.!

11:58 AM Dec 05, 2023 IST | 1newsnationuser4
அண்ணணே சொந்த  தங்கையை நண்பர்களுடன் துடிக்க துடிக்க கூட்டு பாலியல் வன்புணர்வு    5 பேர் கைது
Advertisement

ஒடிசா மாநிலத்தில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இறந்த பெண்ணின் சகோதரர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை நடந்து ஒரு மாதங்களுக்கு பின் குற்றவாளிகளை கைது செய்து இருக்கிறது காவல்துறை.

Advertisement

ஒடிசா மாநிலம் புல்பானி மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது பெண் கடந்த நவம்பர் மூன்றாம் தேதி காணாமல் போனதாக அவரது சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் அந்தப் பெண்ணின் உடல் அங்குள்ள காட்டுப்பகுதியில் இருந்து அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் அந்தப் பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பது உறுதியானது.

இதனைத் தொடர்ந்து உனக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிரமான விசாரணையில் இறங்கினர். அப்போது அந்தப் பெண்ணின் மூத்த சகோதரர் மீது சந்தேகம் ஏற்படவே அவரைப் பிடித்து விசாரித்ததில் உண்மை சம்பவம் வெளியாகி இருக்கிறது. அந்தப் பெண்ணின் மூத்த சகோதரர் வேறொரு பெண்ணுடன் தவறான உறவில் இருந்திருக்கிறார். இதனை தெரிந்து கொண்ட அவரது சகோதரி தவறான உறவை கைவிடும் படி வற்புறுத்தி இருக்கிறார். இல்லையென்றால் உண்மையை வெளியே கூறி விடுவதாகவும் விரட்டி உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் மூத்த சகோதரர் தனது நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் தீட்டி அவரது சகோதரி காட்டிற்கு இலை பொறுக்கச் சென்றபோது அவரைக் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்து கோடாரியாள் கொடூரமாக வெட்டி படுகொலை செய்துள்ளனர். இந்தக் கொடூர கொலை சம்பவம் நடந்து ஒரு மாதங்களுக்குப் பின் காவல்துறை துப்பு துலக்கி அந்தப் பெண்ணின் சகோதரர் உட்பட ஐந்து பேரை கைது செய்து இருக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
Advertisement